அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது - பிரதமர் மோடி


அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 9 Nov 2019 12:50 PM GMT (Updated: 9 Nov 2019 12:50 PM GMT)

அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இன்று அயோத்தி தீர்ப்பு வெளியானதையடுத்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதாவது:- 

நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.  என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.

மாரத்தான் விசாரணைக்குப் பின்பு தீர்ப்பு வந்துள்ளது. நீண்ட நாளாக நீடித்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுள்ளது. இந்தியாவின் சகிப்புத் தன்மையை உணர்த்துகிறது. 

மிக நீண்ட சட்ட நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களாட்சி வலிமையாக தொடருகிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது.

உலகிலேயே இந்தியா மட்டும் தான் பெரும் ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது. மக்களாட்சி வலிமையாக தொடருகிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. அயோத்தி வழக்கு தினமும் விசாரிக்கப்பட வேண்டும் என நாடு விரும்பியது நிகழ்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று.  உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகி உள்ளது. மிக நீண்ட சட்டமுறை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டது போல இங்கே புதிய பாதை உருவாகி உள்ளது. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான வழி இந்த தீர்ப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story