உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு


உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 9:30 PM GMT (Updated: 11 Nov 2019 9:30 PM GMT)

உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோரக்பூர்,

உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பைராகி கிராமத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதிக்குள் இருந்த ‘இன்வெர்ட்டர்’ கருவியின் பேட்டரி நேற்று திடீரென வெடித்தது. பலத்த சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியதால், மசூதியின் சுவர் மற்றும் மேற்கூரையில் லேசான விரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் போது மசூதிக்குள் யாரும் இல்லாததால், காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. எனினும் இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story