டெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை


டெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை
x
தினத்தந்தி 13 Nov 2019 3:32 PM GMT (Updated: 13 Nov 2019 3:32 PM GMT)

டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட டெல்லி அரசாங்கத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் காய்ந்த பயிர் தட்டைகள் உள்ளிட்டவற்றை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி என்.சி.ஆர் பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. மேலும் நிலக்கரி மற்றும் இதர எரிபொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் வரும் நவ.15 வரை மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்திலும் காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story