அயோத்தியில் மசூதி கட்ட நிலம் தர இந்து குடும்பங்கள் விருப்பம்


அயோத்தியில் மசூதி கட்ட நிலம் தர இந்து குடும்பங்கள் விருப்பம்
x
தினத்தந்தி 17 Nov 2019 9:15 PM GMT (Updated: 17 Nov 2019 9:15 PM GMT)

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் தர இந்து குடும்பங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது.

அயோத்தி,

அயோத்தியில் மசூதி கட்ட முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, முக்கியமான இடங்களில் மசூதிக்கான நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேடி வருகிறது. அவற்றில் சில நிலங்களை பரிசீலனைக்கு தேர்வு செய்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் இருந்தும் அறிக்கை கேட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள், கிடைத்துள்ள நிலங்களில் மசூதிக்கு பொருத்தமான இடங்களைப் பற்றிய விவரங்களை பட்டியலிட்டு வருகிறார்கள்.

அதே சமயத்தில், அயோத்தியில் வசிக்கும் சில இந்து குடும்பங்கள், மசூதி கட்ட தங்களது நிலத்தை அளிக்க முன்வந்துள்ளன. குறிப்பாக, ராஜ்நாராயணன் தாஸ் என்பவர் ராமஜென்ம பூமியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தனது 5 ஏக்கர் நிலத்தை தர முன்வந்துள்ளார். இது, மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Next Story