நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வழிநடத்த வேண்டும் - ப.சிதம்பரம் கருத்து


நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வழிநடத்த வேண்டும் - ப.சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 18 Nov 2019 9:59 PM GMT (Updated: 18 Nov 2019 9:59 PM GMT)

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வழிநடத்த வேண்டும் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக மத்திய அரசு மீது, முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் அவர், இது தொடர்பாக தனது குடும்பத்தினர் மூலமாக டுவிட்டர் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘நாடாளுமன்றம் இன்று (நேற்று) தொடங்கும் நிலையில், மத்திய அரசின் மிக மோசமான பொருளாதார நிர்வாகத்தை அம்பலப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வழிநடத்த வேண்டும். பொருளாதாரத்தின் எந்த அம்சம்தான் சரியாக செயல்படுகிறது? ஒன்றும் இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான நேர்மையான விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை ஏற்க மத்திய அரசு மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.


Next Story