முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 19 Nov 2019 4:30 AM GMT (Updated: 19 Nov 2019 4:30 AM GMT)

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது சமாதியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதேபோன்று முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த ஆண்டு தினத்தில் அவருக்கு அஞ்சலி என பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்து உள்ளார்.

Next Story