மீண்டும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்; குழப்பத்தில் பயனாளர்கள்


மீண்டும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்; குழப்பத்தில் பயனாளர்கள்
x
தினத்தந்தி 19 Nov 2019 7:43 AM GMT (Updated: 19 Nov 2019 7:43 AM GMT)

உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மீண்டும் முடங்கின.

புதுடெல்லி,

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நவம்பர் 19 அன்று ட்விட்டர்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாக புகார் அளித்து உள்ளனர்.

ஆன்லைன் செயலிழப்புகளை கண்காணிக்கும் டவுன்டெக்டர் வலைத்தள அறிக்கையின் படி,  முழு பேஸ்புக் நெட்வொர்க்கும்  செயலிழக்கவில்லை. ஆனால் பல பகுதிகளில் சேவைகளில் இடையூறு  இருந்ததாக கூறி உள்ளது.

63 சதவீதம் பேர் மொத்த இருட்டடிப்பு செய்ததாகக் கூறினாலும், 19 சதவீதம்  பேர் உள்நுழைவதில் சிக்கல்கள் இருந்தன என்றும், 16 சதவீதம்  பேர் தங்கள் செய்திகளை பதிவிடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கூறி உள்ளனர்.

சமூக வலைப்பின்னல் தளமானது சமீபத்திய செயலிழப்பை, அடையாளம் காணவோ அல்லது அதுபற்றி கருத்து தெரிவிக்கவோ இல்லை.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை மொத்த செயலிழப்பை சந்தித்தன. ஆயிரக்கணக்கான பயனர்கள் ட்விட்டருக்குச் சென்றதால் சமூக ஊடக தளங்களை பயன்படுத்த முடியவில்லை என்று புகார் கூறினர்.

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் எதிர்கொண்ட மிகப்பெரிய செயலிழப்பு மார்ச் மாதத்தில் 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த பிரச்சினைக்கு டேட்டாபேசில் ஏற்பட்ட அதிக சுமையே காரணம் என்று பேஸ்புக் குற்றம் சாட்டியது.

Next Story