மும்பை பங்கு சந்தை; வரலாறு காணாத உச்சம் அடைந்த சென்செக்ஸ் குறியீடு


மும்பை பங்கு சந்தை; வரலாறு காணாத உச்சம் அடைந்த சென்செக்ஸ் குறியீடு
x
தினத்தந்தி 20 Nov 2019 7:13 AM GMT (Updated: 20 Nov 2019 7:13 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 40,816 புள்ளிகளை தொட்டு முதன்முறையாக வரலாறு காணாத உச்சமடைந்து உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் நேற்று வர்த்தக நிறைவில் சென்செக்ஸ் குறியீடு 185.51 புள்ளிகள் உயர்ந்து 40,469.70 என்ற லாப நோக்குடன் காணப்பட்டது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு நேற்று வர்த்தகம் முடிவடையும்பொழுது, 72.70 புள்ளிகள் உயர்ந்து 11,957.20 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 155.89 புள்ளிகள் உயர்ந்து 40,625.59 புள்ளிகளாக இருந்தது.

இவற்றில் இன்டஸ்இன்ட் வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் அதிக லாபத்துடன் காணப்பட்டன.  தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு இன்று 89.65 புள்ளிகள் உயர்ந்து 12,029.75 புள்ளிகளாக இருந்தது.

வர்த்தகத்தின் இடையே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 346 புள்ளிகள் உயர்ந்து 40,816 புள்ளிகளை தொட்டு வரலாறு காணாத உச்சம் அடைந்து உள்ளது.  இதற்கு முன் 40,789 புள்ளிகள் என்ற அளவிலேயே சென்செக்ஸ் குறியீடு உச்சம் அடைந்து இருந்தது.

இதனால் டாடா கன்சல்டன்சி, எல் அண்டு டி, இன்டஸ்இன்ட் வங்கி, பாரதி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட பங்குகளின் மதிப்பு லாபத்துடன் காணப்பட்டன.  இவற்றில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 4.05 சதவீத லாபத்துடன் உயர்ந்து முன்னிலையில் இருந்தது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 12 ஆயிரம் புள்ளிகளை கடந்திருந்தது.

Next Story