இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவு பொருந்தும் - அமித் ஷா ; மேற்கு வங்கத்தில் இல்லை -மம்தா பானர்ஜி


இந்தியா முழுவதும்  தேசிய குடிமக்கள் பதிவு பொருந்தும் - அமித் ஷா ; மேற்கு வங்கத்தில் இல்லை -மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 20 Nov 2019 10:49 AM GMT (Updated: 20 Nov 2019 10:49 AM GMT)

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை (என்.ஆர்.சி) தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று கூறி உள்ளார்.

கொல்கத்தா 

இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை மந்திரி  அமித் ஷா இந்திய குடிமக்களின் பதிவு  (என்.ஆர்.சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். யாரும், மதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அனைவரையும் இந்திய குடிமக்களின் தேசிய பதிவின் கீழ் கொண்டுவருவது ஒரு செயல் ஆகும். மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு  நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா  பானர்ஜி கூறியதாவது:-

வங்காளத்தில் யாருடைய குடியுரிமையையும் யாராலும் பறிக்க முடியாது.  தனது அரசாங்கம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்காது எனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை (என்.ஆர்.சி) தனது அரசாங்கம் அனுமதிக்காது என கூறினார்.

Next Story