‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றி


‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றி
x
தினத்தந்தி 20 Nov 2019 5:55 PM GMT (Updated: 20 Nov 2019 5:55 PM GMT)

இன்று இரவு நடத்தப்பட்ட ‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.

பாலசோர்,

இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒடிசாவில் உள்ள சாண்டிபூர் கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை பெற்ற ‘பிருத்வி-2’ ஏவுகணை இன்று இரவு நேரத்தில் 2 முறை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் பெற்றது.

350 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை பெற்ற இந்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story