பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்க திட்டமா? சிவசேனா பதில்


பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்க திட்டமா? சிவசேனா பதில்
x
தினத்தந்தி 22 Nov 2019 5:22 AM GMT (Updated: 22 Nov 2019 5:22 AM GMT)

முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ள பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவருவது பற்றி சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மும்பை,

பாரதீய ஜனதா, சிவசேனா இடையேயான முதல்-மந்திரி பதவி போட்டியால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், இந்த கூட்டணி ஆட்சி அமைந்தால் முதல் 2½ ஆண்டுகள் சிவசேனாவும், அடுத்த பாதியில் தேசியவாத காங்கிரசும் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ளும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,  என்.சி.பி, காங்கிரஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கும் போது, சிவசேனாவுக்கே முதல் மந்திரி பதவி ஒதுக்கப்படும்.  உத்தவ் தாக்ரேதான் முதல் மந்திரியாக வேண்டும் என்று மராட்டிய மக்கள் விரும்புகின்றனர்” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் சஞ்சய் ராவத்திடம், முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ள பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றனவே? என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், பாஜகவுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது” என்றார். 

Next Story