தேவேந்திர பட்னாவிசுடன் அஜித் பவார் தீவிர ஆலோசனை


தேவேந்திர பட்னாவிசுடன் அஜித் பவார் தீவிர ஆலோசனை
x
தினத்தந்தி 26 Nov 2019 6:48 AM GMT (Updated: 26 Nov 2019 6:48 AM GMT)

மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தேவேந்திர பட்னாவிசும் அஜித் பவாரும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மும்பை, 

மராட்டியத்தில் முதல் மந்திரியாக பதவியேற்க தேவேந்திர பட்னாவிசுக்கு, கவனர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிசை துணை முதல் அமைச்சர் அஜித் பவார் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் பாஜக மூத்த தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

Next Story