தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் - மம்தா பானர்ஜி கருத்து


தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் - மம்தா பானர்ஜி கருத்து
x
தினத்தந்தி 26 Nov 2019 2:42 PM GMT (Updated: 26 Nov 2019 2:42 PM GMT)

தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கவர்னர் ஜகதீப் தங்கருடன் ஒரு போதும் சண்டையிட்டதில்லை. அவர் ஏன் தேவையில்லாத சூழ்நிலைகளை உருவாக்குகிறார். உத்தரவுகள் எங்கு இருந்து வருகின்றன என்பது எங்களுக்கு தெரியும். 

பிரதமர் கூட இப்படி நடந்து கொள்ளவில்லை.  மராட்டிய முதல்-மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான். அவருக்கு பெரும்பான்மை இல்லை. தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பு அவர் முதலில் பதவிப் பிரமாணம் ஏற்று இருக்கக் கூடாது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story