திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்திப்பு


திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்திப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 3:22 AM GMT (Updated: 27 Nov 2019 3:22 AM GMT)

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  

சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு  சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால், அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். 

இதனால், கடந்த  3 மாதமாக  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த சூழலில்,  இன்று காலை திகார் சிறை சென்ற  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும்   பிரியங்கா காந்தி  ஆகியோர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர்.


Next Story