சரியான நேரத்தில் சரியானதை சொல்வேன் : தேவேந்திர பட்னாவிஸ்
சரியான நேரத்தில் சரியானதை சொல்வேன் என்று மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு, தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ததும் முற்று பெற்றது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை முதல் மந்திரியாக பதவியேற்க இருக்கிறார்.
இன்று காலை மராட்டிய சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பாஜக எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம், அஜித் பவாருடன் கூட்டணி வைத்ததை தவறு என நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த தேவேந்திர பட்னாவிஸ், சரியான நேரத்தில் சரியானதை சொல்வேன், யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்றார்.
Related Tags :
Next Story