தமிழக மீனவர்கள், படகுகள் விடுவிக்கப்படும்; இலங்கை அதிபர் கோத்தபயா அறிவிப்பு


தமிழக மீனவர்கள், படகுகள் விடுவிக்கப்படும்; இலங்கை அதிபர் கோத்தபயா அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2019 9:14 AM GMT (Updated: 29 Nov 2019 9:14 AM GMT)

இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள், படகுகள் விடுவிக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபயா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவரை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.  இதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, அதிபராக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார்.

3 நாள் பயணமாக வந்துள்ள அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி வி.கே. சிங் வரவேற்றார்.  இன்று காலை, ஜனாதிபதி மாளிகை வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு  அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கோத்தபய ராஜபக்சேவை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினர்.

இதன்பின்னர் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபராக இந்தியா வருவது இதுதான் முதல் முறை என்றார். மேலும், இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் எனவும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே செய்தியாளர்கள் சந்திப்பின்பொழுது பேசுகையில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என கூறினார்.

Next Story