பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது -ராஜ்நாத்சிங்
பயங்கரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
புனே,
மரபு ரீதியிலான போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் புனேவில் தேசிய பாதுகாப்பு அகடமியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மூலம் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது. ஆனால், மறைமுகப்போரில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது. பாகிஸ்தான் தேர்வு செய்துள்ள மறைமுக போர் என்ற பாதை, அதனையே வீழ்த்தப்போகிறது. சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பிரதமரின் திறமையான ராஜதந்திரமே காரணம்” என்றார்.
Related Tags :
Next Story