சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா


சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா
x
தினத்தந்தி 2 Dec 2019 12:49 PM GMT (Updated: 2 Dec 2019 12:49 PM GMT)

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேசிய தலைவருமான அமித்ஷா கூறியதாவது:- “  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளன. 

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டுக்குள் கட்டாயம் வெளியேற்றப்படுவார்கள். 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்துவிடும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்” என்றார். 


Next Story