இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்


இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 2 Dec 2019 3:47 PM GMT (Updated: 2 Dec 2019 3:47 PM GMT)

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சிகரெட், பீடி போன்றவற்றுக்கு மாற்றாக உலக அளவில் இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் அதிக ஆபத்தில்லாதவை எனக் கூறப்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளின் முடிவில், புகையிலை சிகரெட்டுக்கு நிகரான தீங்குகள் இந்த இ-சிகரெட்டாலும் ஏற்படும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இ-சிகரெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில், கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று  இ- சிகரெட்டிற்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. 

இந்த மசோதா இனி ஜனாதிபதி   ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையொப்பம் பெற்ற பின் சட்டமாகும்.

Next Story