மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி


மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 3 Dec 2019 12:39 PM GMT (Updated: 3 Dec 2019 12:39 PM GMT)

மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா,

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) பட்டியல் அசாமில்  சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. அசாமிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய வெளிநாட்டவர்களை கண்டறியும் நோக்கில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தப்பட்டியலில் விடுபட்டவர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசார  பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அதன்பின்னர் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு  வெளியேற்றப்படுவார்கள். அவர்களை வெளியேற்றாதீர்கள், அவர்கள் எங்கே செல்வார்கள்? என்ன சாப்பிடுவார்கள்? என்று ராகுல் காந்தி கேட்கிறார். ஆனால் அடுத்த தேர்தலுக்குள் இந்தியாவில் கள்ளத்தனமாக குடியேறிய அனைவரும் வெளியே வீசப்படுவார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மேற்கு வங்காளத்தில் ஒரு போதும் என்.ஆர்.சி பட்டியலுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மேலும், சாதி மற்றும் மத அடிப்படையில் நீங்கள் என்.ஆர்.சி.யை செயல்படுத்த முடியாது என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

Next Story