இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் - ராஜ்நாத் சிங்


இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 4 Dec 2019 7:53 AM GMT (Updated: 4 Dec 2019 7:53 AM GMT)

இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் இன்று, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது,  

நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்காக சீன எல்லையில் சாலைகள், சுரங்கங்கள், ரெயில் பாதைகள் மற்றும் விமானநிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

 இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது. எல்லை தெளிவாக இல்லாததால் இருதரப்பும் எல்லை தாண்டும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

எங்கள் படைகள் விழிப்புடன் இருப்பதாகவும், எல்லைகளை பாதுகாப்பதாகவும் நான் இங்கு உறுதியளிக்க விரும்புகிறேன். எங்கள் படைகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவை, இது குறித்து யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று கூறினார்.

Next Story