சபரிமலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல - தலைமை நீதிபதி
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல என்று தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவது பற்றி தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அறிவித்தது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், பிந்து அம்மினி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாப்டே, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story