அசாமில் சரக்கு ரெயில் தடம் புரண்டது


அசாமில் சரக்கு ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 8 Dec 2019 7:49 AM GMT (Updated: 8 Dec 2019 7:49 AM GMT)

அசாமில் சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன

திப்ரூகார்,

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் நஹர்காட்டியா ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகின.  இதனை அறிந்த அருகில் வசிப்போர் சம்பவ பகுதிக்கு ஓடி வந்தனர்.  எனினும், சரக்கு ரெயில் என்பதனால் பயணிகள் யாரும் இல்லை.  உயிரிழப்பு மற்றும் காயம் ஆகிய சேதங்களும் ஏற்படவில்லை.  இதுபற்றி தகவல் அறிந்து ரெயில்வே துறை ஊழியர்கள் ரெயிலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story