தீப்பிடித்த கட்டிடத்தில் கதவுக்கு அருகே தூங்கியதால் தப்பித்தேன் - உயிர் பிழைத்தவர் பேட்டி


தீப்பிடித்த கட்டிடத்தில் கதவுக்கு அருகே தூங்கியதால் தப்பித்தேன் - உயிர் பிழைத்தவர் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2019 8:43 PM GMT (Updated: 8 Dec 2019 8:43 PM GMT)

தீப்பிடித்த கட்டிடத்தில் கதவுக்கு அருகே தூங்கியதால் தப்பித்ததாக, உயிர் பிழைத்தவர் ஒருவர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து உயிர் தப்பியவர்களில் பிரோஸ் கான் (வயது 32) என்பவரும் ஒருவர். அவர் 3-வது மாடியில் உள்ள தொப்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். உயிர் தப்பியது குறித்து அவர் கூறியதாவது:-

நான் கண் விழித்தபோது, நான் படுத்திருந்த அறையில் தீ எரிவதை பார்த்தேன். கதவுக்கு 6 மீட்டர் தூரத்தில் நான் படுத்திருந்தேன். உடனே, என் அருகே தூங்கிக்கொண்டிருந்த நான்கைந்து பேரை உஷார் படுத்தி எழ வைத்தேன். அவர்களுடன் கதவு வழியாக வெளியேறி தப்பி விட்டேன்.

கதவுக்கு அதிக தூரத்தில் தூங்கியவர்கள்தான் தீயில் சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் உயிர் பிழைத்தார்களா என்றே எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story