உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
x
தினத்தந்தி 9 Dec 2019 5:32 AM GMT (Updated: 9 Dec 2019 5:32 AM GMT)

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு ஆகியவைகளை பின்பற்றாமல் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டிய திமுக, தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கூறியிருந்தது.  

இதன்படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக  உச்ச நீதிமன்றத்தில் திமுக  மனு தாக்கல் செய்துள்ளது.  வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை எனவும்  1991-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

Next Story