நமாமி கங்கா திட்டம்: தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு


நமாமி கங்கா திட்டம்: தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 9:51 AM GMT (Updated: 14 Dec 2019 9:51 AM GMT)

நமாமி கங்கா திட்டத்தின் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கான்பூர்

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

முன்னதாக கான்பூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

அவருடன் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத், உத்தர பிரதேச  முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி உள்ளிட்டோர்  பங்கேற்றனர். அதில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட நமாமி கங்கா திட்டம்  குறித்து விவாதிக்கப்பட்டது.

Next Story