குடியுரிமை சட்டத்தை எதிர்த்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2019 7:23 PM GMT (Updated: 15 Dec 2019 7:23 PM GMT)

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

லண்டன்,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, லண்டனில் இந்திய தூதரகம் முன்பு, போராட்டம் நடந்தது. இங்கிலாந்தில் குடியேறிய அசாம் மாநில மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய உடையில், குழந்தைகளுடன் அவர்கள் பங்கேற்றனர்.

‘ஜனநாயகத்தை பாதுகாப்போம், குடியுரிமை சட்டத்தை தடுத்து நிறுத்துவோம்‘ என்று ஆங்கிலத்திலும், அசாமி மொழியிலும் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் பிடித்திருந்தனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

அதுபோல், இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story