குடியுரிமை சட்டம் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்ட சமாஜ்வாடி தொண்டர் மீது வழக்கு


குடியுரிமை சட்டம் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்ட சமாஜ்வாடி தொண்டர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Dec 2019 9:25 PM GMT (Updated: 17 Dec 2019 9:25 PM GMT)

குடியுரிமை சட்டம் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்ட சமாஜ்வாடி தொண்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி தொண்டர் சஜித் ஹசன். இவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதனை கண்காணித்த சிவில் லைன்ஸ் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்ததும் சஜித் ஹசன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகளை பதிவு செய்ய வேண்டாம் என்றும், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story