ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
x
தினத்தந்தி 23 Dec 2019 2:30 AM GMT (Updated: 23 Dec 2019 2:55 AM GMT)

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.  8.30 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் தெரிய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முடிவு மதியம் 1 மணிக்கும், கடைசி முடிவு இரவு 8 மணிக்கும் வெளியாகும் எனத்தெரிகிறது. 

ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது இன்று மாலைக்குள் தெரிய வந்து விடும். தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளன. அவை பலிக்குமா என்பதுவும் இன்று தெரிந்து விடும்.


Next Story