உள்நாட்டு போர் ஏற்பட ராகுல், ஓவைசி விரும்புகின்றனர் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங்


உள்நாட்டு போர் ஏற்பட ராகுல், ஓவைசி விரும்புகின்றனர் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங்
x
தினத்தந்தி 26 Dec 2019 12:49 PM GMT (Updated: 26 Dec 2019 12:49 PM GMT)

உள்நாட்டு போர் ஏற்பட ராகுல் காந்தி மற்றும் அசாதுதீன் ஓவைசி விரும்புகின்றனர் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, ராகுல் காந்தி, காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் சிறு சிறு கும்பல்கள் ஆகியோர் முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் செய்ய முடியாதவற்றை செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.

அவர்கள் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த விரும்பினர்.  உள்நாட்டு போர் வரவேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர். இதேபோன்று குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இந்தியாவில் உள்நாட்டு போரை தொடங்க ராகுல் மற்றும் ஓவைசி விரும்புகின்றனர் என கூறியுள்ளார்.

Next Story