என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் - ராகுல் காந்தி


என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 27 Dec 2019 11:27 AM GMT (Updated: 27 Dec 2019 11:27 AM GMT)

என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்திருவிழாவை ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சி முடிந்த பின்  ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய இரண்டுமே ஏழை மக்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமை, ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். இப்போது எங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும் என ஏழை மக்கள் கேட்கிறார்கள். 

ஏற்கனவே பணமதிப்பிழப்பு என்ற சுமை, மக்கள் மீது திணிக்கப்பட்டது.  சமூகத்தில் ஒவ்வொரு தரப்பு மக்களின் பங்களிப்பு இல்லாமல் தேசத்தின் பொருளாதாரம் இயங்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story