பேஸ்புக், ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தடை


பேஸ்புக், ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தடை
x
தினத்தந்தி 30 Dec 2019 6:22 AM GMT (Updated: 30 Dec 2019 6:22 AM GMT)

பேஸ்புக், ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதற்கு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு இந்திய கடற்படை தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இதேபோன்று கடற்படை தளங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் போர் கப்பல்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சமூக ஊடகம் வழியே பகைநாட்டு உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை கசிய விட்ட விவகாரத்தில் 7 கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  இதனால் கடற்படை தகவல்கள் திருடு போகாமல் தடை செய்யும் வகையில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story