சிஏஏ-வுக்கு ஆதரவு தெரிவித்து கோவாவில் காங்.மூத்த தலைவர்கள் 4 பேர் கட்சியில் இருந்து விலகல்


சிஏஏ-வுக்கு ஆதரவு தெரிவித்து கோவாவில் காங்.மூத்த தலைவர்கள் 4 பேர் கட்சியில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 2 Jan 2020 8:21 AM GMT (Updated: 2 Jan 2020 11:05 AM GMT)

சிஏஏ-வுக்கு ஆதரவு தெரிவித்து கோவாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் 4 பேர் விலகியுள்ளனர்.

பனாஜி,

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில்  காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவா காங்கிரசின் மூத்த தலைவர்கள் 4 பேர் கட்சியில் இருந்து விலகினர். 

பனாஜி காங்கிரஸ் பிளாக் கமிட்டி தலைவர் பிரஷாத் அமோன்கர், வடக்கு கோவா சிறுபான்மை தலைவர் ஜாவீத் ஷேக், பிளாக் கமிட்டி செயலாளர் தினேஷ் குபால், கோவா முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷிவ்ராஜ் தர்கர் ஆகிய நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். 

கட்சியில் இருந்து விலகிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமோன்கர் “ குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். இந்த விவகாரத்தில் பொதுமக்களை குறிப்பாக சிறுபான்மை மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.  காங்கிரஸ் எடுத்துள்ள தவறான நிலைப்பாட்டுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்றார். 

Next Story