நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்


நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 7 Jan 2020 11:34 AM GMT (Updated: 7 Jan 2020 11:34 AM GMT)

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார்  கைது செய்தனர்.

விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள்  தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின்  தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.

இந்த நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. மேலும் குற்றவாளிகள் தங்களது சட்ட தீர்வுகளை 14 நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என கூறி உள்ளது.

நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் இதற்கான தீர்வு மனுவை தாக்கல் செய்வோம் என கூறி உள்ளார்.

Next Story