ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்: டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது


ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்: டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 10:31 PM GMT (Updated: 9 Jan 2020 10:31 PM GMT)

டெல்லி போலீஸ் சிறப்பு படையினர் குடியரசு தின விழாவையொட்டி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி வாசிராபாத் பகுதியில் சந்தேகத்துக்கிடமான சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றனர்.

புதுடெல்லி, 

போலீசாரை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் திருப்பி சுட்டனர். பின்னர் அங்கு இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் காஜா மொய்தீன் (வயது 52), அப்துல் சமது (28), சையத் அலி நவாஸ் (32) என்றும், அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்கள் டெல்லி அல்லது உத்தரபிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story