சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது
x
தினத்தந்தி 14 Jan 2020 8:05 AM GMT (Updated: 14 Jan 2020 8:05 AM GMT)

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ந் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குமரி மாவட்டம்  திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த  கொலையை செய்ததாக தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். 

குற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று  காலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறார்கள்.

Next Story