காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்


காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்
x
தினத்தந்தி 18 Jan 2020 9:37 PM GMT (Updated: 18 Jan 2020 9:37 PM GMT)

காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

இடுக்கி,

கேரள மாநிலம், அடிமாலி அருகே கல்லார்க்குட்டி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த ‘பங்க்’ அருகில் ஒரு கார் 2 நாட்களாக தனியாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்தபோது காரின் உள்ளே பெண் ஒருவர் இருந்தார்.

சோர்வாக இருந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த பெண்ணின் பெயர் லைலாமணி என்று தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரித்ததில் அவரும், கணவர் மேத்யூவும் வியாழக்கிழமை அங்கு வந்ததாகவும், காரை பூட்டிவிட்டு இயற்கை உபாதையை கழிக்க சென்ற கணவர் திரும்பி வரவில்லை எனவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அவர்களுக்கு சொந்த ஊர் வயநாடு மாவட்டம் தலப்புழா ஆகும். அங்கு இருந்த சொத்துகளை விற்றுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வந்து இருக்கிறார்கள். அவர்களின் மகன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். லைலாமணியிடம் விசாரிக்கும்போது முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story