முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்


முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்
x
தினத்தந்தி 19 Jan 2020 2:21 PM GMT (Updated: 19 Jan 2020 2:21 PM GMT)

முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லி,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை தனது சொந்த ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் இணைந்து கொண்டாடினார். இதற்கிடையே அவர் தந்தி தொலைக்காட்சிக்கு சிலுவம்பாளையத்தில் உள்ள வயல்வெளிகளில் வைத்து பிரத்யேக பேட்டி அளித்தார். 

இந்த பேட்டியின் போது வயலில் இறங்கி வேலை செய்ததோடு, விவசாயம் தொடர்பான தனது அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில் இது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழக முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. தனது ஆதாரமான விவசாயத்தை அவர் மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது.

முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருகிறார். விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story