மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டது


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டது
x
தினத்தந்தி 20 Jan 2020 4:18 AM GMT (Updated: 20 Jan 2020 4:18 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 328.50 புள்ளிகள் உயர்ந்து 42,273.87 புள்ளிகளாக காணப்பட்டது.  இது வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்து உள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 78.15 புள்ளிகள் உயர்வடைந்து 12,430.50 புள்ளிகளாக உள்ளது.  இதுவரை இல்லாத அளவில் நிப்டி குறியீடு வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது.

எனினும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசாக்கள் குறைந்து ரூ.71.12 ஆக உள்ளது.  கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது.

Next Story