முதல்வராக ஆசையில்லை டெல்லியின் முன்னேற்றம் தான் முக்கியம் - அரவிந்த் கெஜ்ரிவால்


முதல்வராக ஆசையில்லை டெல்லியின் முன்னேற்றம் தான் முக்கியம் - அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 26 Jan 2020 11:01 AM GMT (Updated: 26 Jan 2020 11:01 AM GMT)

மீண்டும் முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை என்றும் டெல்லியின் முன்னேற்றத்திற்காக தான் வெற்றி பெற வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆளும்கட்சியான ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கிரேட்டர் கைலாஷ் நகரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது;-

“ஆம் ஆத்மி அரசு, பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த கடினமாக உழைத்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கும் தேர்தல் டெல்லியின் முன்னேற்றத்திற்கானது. தலைநகர் டெல்லியின் முன்னேற்றத்திற்காக ஓட்டுகளை பெற வேண்டுமே தவிர, எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையில்லை.

எங்களுடைய சிறிய அளவிலான பட்ஜெட்டில் 5 ஆண்டுகளில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் பாதி அதிகாரம் வைத்திருக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தப்படவில்லை. நிர்பயா நிதிகள் அனைத்தும் அமித்ஷாவிடம் இருக்கிறது; அதை வைத்து சில கேமராக்களை பொருத்தியிருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Next Story