காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது


காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 26 Jan 2020 5:15 PM GMT (Updated: 26 Jan 2020 5:15 PM GMT)

காஷ்மீரில் மாநிலத்தில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இதனால் மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக்கில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொலைபேசி சேவைகள் மற்றும் 2ஜி இணைய சேவைகள் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. 

Next Story