ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்


ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 26 Jan 2020 7:58 PM GMT (Updated: 26 Jan 2020 7:58 PM GMT)

ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

விஜயவாடா,

ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணா மாவட்டத்தின் நண்டிகமா, ஜக்கய்யாபேட் போன்ற இடங்களிலும் குண்டூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடு மற்றும் கட்டிடங்கள் குலுங்கியன. 3 முதல் 6 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

சில இடங்களில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியதையும் காண முடிந்தது. இதனால் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த பகுதிகளில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல ஜனவரி 26-ந்தேதி நில அதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story