இலங்கையில் சீதைக்கு கோவில்: மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கட்டுகிறது
இலங்கையில் மத்தியபிரதேச காங்கிரஸ் அரசால் சீதைக்கு கோவில் கட்டப்பட உள்ளது.
போபால்,
மத்தியபிரதேச முதல்-மந்திரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் நேற்று இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும் என்றும், இதற்கான வரைபடத்தை இறுதி செய்து இந்த நிதி ஆண்டுக்குள்ளேயே நிதி ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த கோவில் கட்டுமான பணிகளை கண்காணிக்க இலங்கை அரசு அதிகாரிகள், சிங்கள சமுதாய உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் அவர் உத்தரவிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல மாநிலத்தின் சான்சி பகுதியில் புத்தர் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கும்படியும் அதிகாரிகளை கமல்நாத் கேட்டுக்கொண்டார்.
மத்தியபிரதேச முதல்-மந்திரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் நேற்று இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும் என்றும், இதற்கான வரைபடத்தை இறுதி செய்து இந்த நிதி ஆண்டுக்குள்ளேயே நிதி ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த கோவில் கட்டுமான பணிகளை கண்காணிக்க இலங்கை அரசு அதிகாரிகள், சிங்கள சமுதாய உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் அவர் உத்தரவிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல மாநிலத்தின் சான்சி பகுதியில் புத்தர் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கும்படியும் அதிகாரிகளை கமல்நாத் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story