நிர்பயா வழக்கு : குற்றவாளி அக்‌ஷய் குமாரின் கருணை மனு தள்ளுபடி


நிர்பயா வழக்கு : குற்றவாளி அக்‌ஷய் குமாரின் கருணை மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 30 Jan 2020 8:34 AM GMT (Updated: 30 Jan 2020 8:34 AM GMT)

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமாரின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நிர்பயா என்ற மருத்துவ மாணவி, டெல்லியில் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட  வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டினால் உறுதி செய்யப்பட்டு விட்டது.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் கடைசி சட்ட ஆயுதமாக கருதப்படுகிற சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த 17-ந்தேதி ஜனாதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய கருணை மனுவும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் பிப்ரவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அக்‌ஷய் குமார் அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும் பிப்ரவரி 1-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story