ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2020 8:09 AM GMT (Updated: 31 Jan 2020 8:09 AM GMT)

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் அதிகாலை 5 மணியளவில் லாரி ஒன்றை நிறுத்தி போலீசார்  சோதனை நடத்தினர். அப்போது அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்,  போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக  சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து போலீசாரும் திருப்பி சுட்டனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் 3 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டையில் போலீசார் ஒருவரும் காயமடைந்தார். மேலும் 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால்  அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

கீராநகர் எல்லை வழியே அவர்கள் ஊடுருவியிருக்கலாம் எனவும், லாரியில் ஸ்ரீநகரை நோக்கி சென்று கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Next Story