கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல்


கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல்
x
தினத்தந்தி 4 Feb 2020 5:50 AM GMT (Updated: 4 Feb 2020 5:50 AM GMT)

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல் நடத்தி உள்ளது.

புதுடெல்லி

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்தாண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 2,335 முறை, இந்திய ராணுவ நிலைகளையும், பொதுமக்களையும் குறிவைத்து, தாக்குதல் நடத்தி உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்து உள்ளார்.

கடந்தாண்டு மே மாதம் 30ஆம் தேதி முதல், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரையில், பாகிஸ்தான் ராணுவம், 2,335 முறை, அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, 177 முறை, எல்லைத் தாண்டிய துப்பாக்கிச்சூட்டையும், பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தியிருப்பதாகவும், பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.

Next Story