ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி


ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி
x
தினத்தந்தி 5 Feb 2020 7:31 AM GMT (Updated: 5 Feb 2020 7:31 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான ஷல்டெங் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

இந்த துப்பாக்கிச்சண்டையில்  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த சண்டையின் போது துரதிருஷ்டவசமாக சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலியானர். தொடர்ந்து அப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story