“நிர்மலா சீதாராமனை நீக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது” - பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி டுவீட்
நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து நீக்கிவிட்டால் மோடி தன் மீதான பழியை தீர்த்துக்கொள்ளலாம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் கடந்த 1 ஆம் தேதி நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில் அவர், நாட்டின் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாக இருப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பட்ஜெட் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் குறை கூறிவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவ்வகையில் பட்ஜெட் குறித்து இன்று தனது டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து விமர்சனம் செய்துள்ளார்.
அதில், "அன்புள்ள பிரதமரே, பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. இந்த விஷயத்தில், உங்கள் மீது விழுந்திருக்கும் பழியை எப்படித் தவிர்ப்பது என மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருப்பீர்கள். நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த யோசனை இல்லாத, ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட்டை பயன்படுத்துங்கள். பின்னர் அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முழு பழியையும் அவர் மீது போட்டுவிடுங்கள். பிரச்சினை தீர்ந்தது" என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
Dear PM,
— Rahul Gandhi (@RahulGandhi) February 5, 2020
The economy has imploded & you must be racking your brains on how to avoid the blame.
Use the useless budget presented by clueless Nirmala Ji. Sack her & dump the entire blame on her.
Problem solved.
Related Tags :
Next Story