உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் பாய்ந்தது பொது பாதுகாப்பு சட்டம்


உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் பாய்ந்தது பொது பாதுகாப்பு  சட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2020 1:41 AM GMT (Updated: 7 Feb 2020 5:02 AM GMT)

பரூக் அப்துல்லாவை தொடர்ந்து உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் தூண்ட பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் முயற்சித்தபோதும் பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால் அவை முறியடிக்கப்பட்டன. இப்போது, அங்கு அமைதி திரும்பிவிட்ட நிலையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுவிட்டன. வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவா்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.

அதேவேளையில் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா  பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த தகவலை மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story