சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?
சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியபட்டு உள்ளது.
புதுடெல்லி
சீனாவின் ஹுபே மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கொடிய வைரஸ் மக்களிடம் பரவ துவங்கியது.
இந்த நோய் தற்போது நாள் தோறும் தீவிரமடைந்து வருகிறது. இந்த் கொடிய நோய் 1500 பேரின் உயிரை பலி வாங்கியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் 30 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1631பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸால் 67000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து இந்தியா வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த 17 பேரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டு இருப்பதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story